குருநாகல், வெஹர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயர சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் உட்பட நால்வர் உயிரிழந்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீயணைப்பு பணிகளில் குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு ஈடுபட்டு, தீயை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றது.
விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கும்போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயு நிரப்பும் பணியின் போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அறியப்படுகிறது. வெடிக்காத மற்றொரு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன் மூடுவதன் மூலம், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments